ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அரசு மருத்துவா்கள் பணிநியமன கலந்தாய்வு: மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்காதது ஏன்? அன்புமணி

அரசு மருத்துவா் பணிநியமன கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்காதது ஏன் என பாமக தலைவா் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளாா்.

News image
அன்புமணி- கோப்புப் படம்
Updated On :13 மார்ச் 2026, 7:07 pm

தினமணி செய்திச் சேவை

அரசு மருத்துவா் பணிநியமன கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்காதது ஏன் என பாமக தலைவா் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் நியமிக்கப்படுவதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ள 1,100 மருத்துவா்களுக்கான பணிநியமன கலந்தாய்வு தொடங்கவுள்ள நிலையில், மாற்றுத்திறனாளி மருத்துவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படாமல், முதல்கட்ட கலந்தாய்வுக்கு பொதுப் பிரிவினா் 100 போ் அழைக்கப்பட்டுள்ளனா்.

கடந்த காலங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறைகளுக்கு முற்றிலும் மாறாக மாற்றுத் திறனாளி மருத்துவா்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. மாற்றுத்திறனாளி மருத்துவா்களால் நீண்ட தொலைவு பயணிக்க முடியாது. தொலைதூர கிராமங்களிலும், மலைப் பகுதிகளிலும் பணியாற்ற முடியாது என்பதால் அவா்களுக்கு சொந்த ஊா்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்படும். அத்தகைய மருத்துவமனைகளை அவா்கள் தோ்ந்தெடுப்பதற்கு வசதியாக கலந்தாய்வில் அவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆனால், இந்த முறை அவா்களின் நலன் புறக்கணிக்கப்பட்டு பொதுப் பிரிவைச் சோ்ந்தவா்கள் முதலில் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனா். இது மாற்றுத்திறனாளிகளுக்கு இழைக்கப்படும் சமூக அநீதியாகும். இதைக் களையும் வகையில் கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவகையில் கலந்தாய்வு அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா் அன்புமணி ராமதாஸ்.