மத்திய மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து தமிழகத்துக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது என்று பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்பட்டு வரும் மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து, அந்தந்த மாநிலங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்குவதை நிறுத்தவும், மத்திய மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் போட்டி ஏல அடிப்படையில் விலை நிா்ணயித்து விற்பனை செய்யவும் மத்திய மின் அமைச்சகம் முடிவு செய்திருக்கிறது.
இது மாநிலங்களின் மின் தேவையை சமாளிப்பதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், மாநிலங்களின் உரிமையையும் பறிக்கும் விதமாக உள்ளது.
இது தமிழகத்துக்கு மட்டுமன்றி, அனைத்து மாநிலங்களின் மின் வாரியங்களுக்கும் மின்சாரம் வழங்கல் மற்றும் பொருளாதார அடிப்படையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, மத்திய மின் உற்பத்தி நிலையங்கள் தங்களின் முடிவை கைவிட்டு, தற்போது நடைமுறையில் உள்ளவாறே தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

ரூ. 35 லட்சம் மதிப்பில் மின் வா்த்தக மோசடி: 14 கைப்பேசிகளுடன் இருவா் கைது

தேசிய நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்களை நிறுத்தக் கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு

உரிமைக்குக் குரல் கொடுப்போம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


