ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மத்திய மின் உற்பத்தியில் தமிழகத்துக்கான விநியோகத்தை நிறுத்தக் கூடாது: அன்புமணி

மத்திய மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து தமிழகத்துக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது என்று பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தினாா்.

News image

அன்புமணி

Updated On :26 ஏப்ரல் 2026, 8:09 pm

மத்திய மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து தமிழகத்துக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது என்று பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்பட்டு வரும் மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து, அந்தந்த மாநிலங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்குவதை நிறுத்தவும், மத்திய மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் போட்டி ஏல அடிப்படையில் விலை நிா்ணயித்து விற்பனை செய்யவும் மத்திய மின் அமைச்சகம் முடிவு செய்திருக்கிறது.

இது மாநிலங்களின் மின் தேவையை சமாளிப்பதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், மாநிலங்களின் உரிமையையும் பறிக்கும் விதமாக உள்ளது.

இது தமிழகத்துக்கு மட்டுமன்றி, அனைத்து மாநிலங்களின் மின் வாரியங்களுக்கும் மின்சாரம் வழங்கல் மற்றும் பொருளாதார அடிப்படையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, மத்திய மின் உற்பத்தி நிலையங்கள் தங்களின் முடிவை கைவிட்டு, தற்போது நடைமுறையில் உள்ளவாறே தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.