பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு: மீண்டும் சென்னை திரும்பிய இண்டிகோ விமானம்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மதுரை புறப்பட்ட இண்டிகோ விமானம் மீண்டும் சென்னையிலேயே தரையிறங்கியது.

News image

இண்டிகோ விமானம் - கோப்புப்படம்.

Updated On :20 ஜூன் 2025, 11:07 am

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மதுரை புறப்பட்ட இண்டிகோ விமானம் மீண்டும் சென்னையிலேயே தரையிறங்கியது.

சென்னையில் இருந்து 68 பயணிகளுடன் வெள்ளிக்கிழமை மதுரைக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது.

உடனே இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு விமானி தகவல் தெரிவித்தார்.

பின்னர் அந்த விமானம் மீண்டும் சென்னைக்கே திரும்பியது. சென்னை வந்ததும் பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

விமானியின் இந்த சாதுர்யமான நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இருப்பினும் இச்சம்பவம் குறித்து இண்டிகோ நிறுவனத்திடமிருந்து உடனடி பதில் எதுவும் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.