அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

விராலிமலை: மின்சாரம் தாக்கி இளைஞர் பலி!

கோயில் விழாவுக்கு ஒலிபெருக்கி கட்டும் போது மின்சாரம் தாக்கியதில் மைக்செட் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
விராலிமலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மைக்செட் தொழிலாளி ரமேஷ்
Updated On :2 மார்ச் 2025, 4:01 am

DIN

விராலிமலையில் கோயில் விழாவுக்கு ஒலிபெருக்கி கட்டும் போது மின்சாரம் தாக்கியதில் மைக்செட் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் உள்ள அம்மன் கோயில் 7ம் ஆண்டு வருடாபிஷேகம் விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு கோயில் பகுதியை சுற்றி ஸ்பீக்கர்கள்,ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நள்ளிரவு விராலிமலை கடைவீதி அருகே உள்ள ஹைமாஸ் லைட் கம்பத்தில் ஏறி ஒலிபெருக்கி கட்டும் போது அவ்வழியாக சென்ற குறைந்த அழுத்த மின்வட கம்மி எதிர்பாராதவிதமாக தொழிலாளி மீது உரசியதில் விராலிமலை அடுத்துள்ள சரளபட்டியைச் சேர்ந்த ரமேஷ் (22) என்ற இளைஞர் கம்பத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டு அருகில் இருந்த வணிக கடை கூரையில் விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்த அவரை சக தொழிலாளிகள் மீட்டு விராலிமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் அவரை பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இதுகுறித்து தகவலறிந்த விராலிமலை போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.