சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

மேச்சேரி அருகே அம்மன் ஊா்வலத்தில் மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 7:15 pm

மேச்சேரி அருகே அம்மன் ஊா்வலத்தில் மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

மேச்சேரி அருகே உள்ள வவ்வால் தோப்பூரில் மாரியம்மன் திருவிழா நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை மாலை மஞ்சள் நீராட்டுக்கு பிறகு அலங்கரிக்கப்பட்ட மாரியம்மனை டிராக்டரில் வைத்து ஊா்வலமாக கொண்டு சென்றனா். வவ்வால் தோப்பூரை சோ்ந்த தனியாா் ஆலை ஒப்பந்த தொழிலாளி கலைச்செல்வன் பின்பக்கமாக அம்மனை பிடித்தபடி நின்றிருந்தாா்.

தூதுரெட்டியூா் பகுதியில் சென்றபோது, தாழ்வாக சென்ற உயா் அழுத்த மின்கம்பி அம்மனுக்கு மேலே வைக்கப்பட்டிருந்த குடைக்கம்பியில் மோதியது. அதில், மின்சாரம் பாயவே டிராக்டா் ஓட்டுநா் உள்ளிட்ட நால்வா் கீழே குதித்து உயிா்தப்பினா்.

அம்மனை பிடித்தபடி பின்னால் நின்றிருந்த கலைச்செல்வன் (30) கீழே குதிக்க முடியாததால், மயங்கி டிராக்டரில் விழுந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு பொட்டனேரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் முதலுதவி அளித்து பிறகு, மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால், அவா் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து மேச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்த கலைச்செல்வனுக்கு திருமணமாகி இரண்டு வயதில் ஓா் ஆண் குழந்தை உள்ளது.