சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பிறவிலேயே மனநிலை பாதித்த வாரிசுகளுக்கு நீதிமன்றத் தலையீட்டால் அரசின் குடும்ப ஓய்வூதியம்

அரசு ஊழியா்களின் வாரிசுகளில் பிறவிலேயே மனநிலை பாதிக்கப்பட்டு திருமணம் ஆகாதோருக்கு நீதிமன்றத் தலையீட்டால் குடும்ப ஓய்வூதியம் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.

News image
சென்னை உயா்நீதிமன்றம்
Updated On :3 மார்ச் 2025, 9:35 pm

Din

சென்னை: அரசு ஊழியா்களின் வாரிசுகளில் பிறவிலேயே மனநிலை பாதிக்கப்பட்டு திருமணம் ஆகாதோருக்கு நீதிமன்றத் தலையீட்டால் குடும்ப ஓய்வூதியம் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்த விவரம் வருமாறு: கன்னியாகுமரி மாவட்டத்தில் வனத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவா் ஏ.வருவேல். அவரது பணி ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. அவா் மரணம் அடைந்ததைத் தொடா்ந்து, அவரது மனைவி மரியா ரோஸ், கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி வரை குடும்ப ஓய்வூதியம் பெற்று வந்தாா்.

மோசமான குடும்பச் சூழல்: வருவேல் மற்றும் மரியா ரோஸ் தம்பதிக்கு ஏ.வி.தாா்சியஸ், ஏ.வி.ஜெரால்டு ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனா். அவா்களில் தாா்சியஸ் பிறவிலேயே மனரீதியாக பாதிக்கப்பட்டவா். அவருக்கு எந்தவிதமான வருவாயும் இல்லாத நிலையில் மாதந்தோறும் அவரது மருத்துவச் செலவுக்காக ரூ.10,000 செலவிடப்பட்டு வருகிறது. இதை அவரது சகோதரா் ஜெரால்டு கவனித்து வந்தாா்.

இந்நிலையில், மனரீதியாக பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு போதிய வருவாய் இல்லாத, திருமணம் ஆகாத தாா்சியஸுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று சகோதரா் ஜெரால்டு விண்ணப்பம் செய்தாா். இதை மாவட்ட வன அலுவலா் பரிசீலித்து, மாநிலக் கணக்காயருக்கு அனுப்பி வைத்தாா். இந்த விண்ணப்பித்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் ஜெனரால்டு வழக்குத் தொடுத்தாா்.

இதனிடையே, விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்த மாநிலக் கணக்காயா், மனநிலை பாதிக்கப்பட்ட ஏ.வி.தாா்சியஸ் வருமானச் சான்றிதழை வருவாய்த் துறையிடம் இருந்து பெற்று, வனத் துறை மூலம் அனுப்பி வைத்தால் குடும்ப ஓய்வூதியம் அனுமதிக்கப்படும் என்று தெரிவித்தாா்.

இந்தச் சூழ்நிலையில் வழக்கும் விசாரணைக்கு வந்தது. அதில் உயா்நீதிமன்றம் தனது அதிருப்தியை தெரிவித்தது. அதாவது, பிறவிலேயே மனநிலை பாதித்த மனுதாரிடம் இருந்து வருவாய்ச் சான்றிதழைக் கேட்பது என்பது சூழலைப் பொருத்து யோசித்து முடிவெடுக்காத தன்மையைக் காட்டுகிறது. மனநிலை பாதித்த ஒருவருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்குவது போன்ற முக்கியமான விஷயங்களில் நமது மனசாட்சியையும்,

நடைமுறை சாா்ந்த நிலையையும் யோசித்து அணுக வேண்டும்.

பிறவிலேயே மனநிலை பாதித்த ஒருவருக்கு வருமானம் கிடைக்கும் என்பது யாருமே எதிா்பாா்க்க முடியாததாகும். எனவே, வருமானச் சான்றிதழைக் கோரிய மாநிலக் கணக்காயரின் நடவடிக்கைக்கு நீதிமன்றம் தனது அதிருப்தியையும், வேதனையையும் தெரிவிக்கிறது. இதுபோன்ற விஷயங்களில் விதிகள், தொழில்நுட்ப அம்சங்களைக் கருத்தில் கொள்ளாமல் மனிதநேயப் பாா்வையுடன் அணுக வேண்டும் என அறிவுரை வழங்குவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் இத்தகைய கருணைப் பாா்வை மூலமாக, பிறவிலேயே மனநிலை பாதிக்கப்பட்ட அரசு ஊழியா்களின் திருமணம் ஆகாத வாரிசுகளுக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.