திமுக ஆட்சியில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று எடப்பாடி கே. பழனிசாமி குற்றஞ்சாட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் வெவ்வேறு பகுதிகளில் நடந்த குற்றச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, திமுக அரசு அலட்சியமாக இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, எடப்பாடி கே. பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் செங்கல்பட்டில் ஓடும் பேருந்தில் பச்சிளம் குழந்தையான 5 வயது சிறுமிக்குகூட பாலியல் தொல்லை, பவானி அருகே சிறுமிக்கு பட்டறை உரிமையாளரால் பாலியல் வன்கொடுமை, பரமக்குடியில் பட்டப்பகலில் நடுரோட்டில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை, மயிலாடுதுறையில் ஆசிரியைக்கு 25 இடத்தில் கொடூரமான முறையில் கத்திக்குத்து.
à®à®à®¨à¯à®¤ 24 மணிநà¯à®°à®¤à¯à®¤à®¿à®²à¯ à®®à®à¯à®à¯à®®à¯ தமிழà¯à®¨à®¾à®à¯à®à®¿à®²à¯ நà®à®¨à¯à®¤ நிà®à®´à¯à®µà¯à®à®³à¯:
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) March 6, 2025
-à®à¯à®à¯à®à®²à¯à®ªà®à¯à®à®¿à®²à¯ à®à®à¯à®®à¯ பà¯à®°à¯à®¨à¯à®¤à®¿à®²à¯ பà®à¯à®à®¿à®³à®®à¯ à®à¯à®´à®¨à¯à®¤à¯à®¯à®¾à®© 5 வயத௠à®à®¿à®±à¯à®®à®¿à®à¯à®à¯ à®à¯à® பாலியல௠தà¯à®²à¯à®²à¯
-பவானி à®à®°à¯à®à¯ à®à®¿à®±à¯à®®à®¿à®à¯à®à¯ பà®à¯à®à®±à¯ à®à®°à®¿à®®à¯à®¯à®¾à®³à®°à®¾à®²à¯ பாலியல௠வனà¯à®à¯à®à¯à®®à¯
-பரமà®à¯à®à¯à®à®¿à®¯à®¿à®²à¯ பà®à¯à®à®ªà¯à®ªà®à®²à®¿à®²à¯, நà®à¯à®°à¯à®à¯à®à®¿à®²à¯ வழà®à¯à®à®±à®¿à®à®°à¯â¦
குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு துளியும் இல்லாத ஆட்சி, திமுக ஆட்சி என்பதே நாள்தோறும் வரும் செய்திகள் சொல்லும் உண்மை.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கவனிப்பதில் முதல்வர் கவனம் செலுத்தாமல், அலட்சியமாக உள்ளார். சட்டம் ஒழுங்கையும், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பையும் உறுதிசெய்ய, இரும்புக்கரத்தின் துருவைத் துடைத்தெறிந்து செயல்படுமாறு வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
சொத்து மற்றும் மனித உடலுக்கு எதிரான வழக்குகள் 2024ம் ஆண்டில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதாக தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டதற்கிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் எக்ஸ் பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிக்க: கை ரிக்ஷாவைப்போல சாதியும் ஒழிக்கப்பட வேண்டும்: நீதிமன்றம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழகத்தைவிட்டு விலகுகிறதா ஹூண்டாய்? முதலீட்டை உறுதிசெய்ய தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் சிங்கப்பெண் போலீஸாா் விழிப்புணா்வு

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான தொடா் வன்முறையால் மக்கள் அச்சம்: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு







