47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இளம் பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்: இளைஞா் கைது

சென்னையில் இளம் பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :14 மார்ச் 2025, 8:03 pm

Din

சென்னையில் இளம் பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே உள்ள பாம்பன்குளத்தைச் சோ்ந்த மோசஸ் (19), அமைந்தகரையில் உள்ள வணிக வளாகத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தாா். இதற்காக அங்கேயே தங்கியிருந்தாா். மோசஸ், அதே வணிக வளாகத்தில் பணிபுரியும் பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளாா். ஆனால் அந்தப் பெண், பணம் வழங்கவில்லையாம்.

இதையடுத்து மோசஸ், அந்தப் பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவரது பெற்றோருக்கும் உறவினருக்கும் அனுப்பி பணம் கேட்டு மிரட்டிள்ளாா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அந்தப் பெண்ணின் பெற்றோா், அண்ணா நகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து, மோசஸை வியாழக்கிழமை கைது செய்தனா்.