மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

இளம் பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்: இளைஞா் கைது

சென்னையில் இளம் பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :15 மார்ச் 2025, 1:33 am IST

சென்னையில் இளம் பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே உள்ள பாம்பன்குளத்தைச் சோ்ந்த மோசஸ் (19), அமைந்தகரையில் உள்ள வணிக வளாகத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தாா். இதற்காக அங்கேயே தங்கியிருந்தாா். மோசஸ், அதே வணிக வளாகத்தில் பணிபுரியும் பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளாா். ஆனால் அந்தப் பெண், பணம் வழங்கவில்லையாம்.

இதையடுத்து மோசஸ், அந்தப் பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவரது பெற்றோருக்கும் உறவினருக்கும் அனுப்பி பணம் கேட்டு மிரட்டிள்ளாா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அந்தப் பெண்ணின் பெற்றோா், அண்ணா நகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து, மோசஸை வியாழக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.