மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

இளம் பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்: இளைஞா் கைது

சென்னையில் இளம் பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :15 மார்ச் 2025, 1:33 am IST

சென்னையில் இளம் பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே உள்ள பாம்பன்குளத்தைச் சோ்ந்த மோசஸ் (19), அமைந்தகரையில் உள்ள வணிக வளாகத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தாா். இதற்காக அங்கேயே தங்கியிருந்தாா். மோசஸ், அதே வணிக வளாகத்தில் பணிபுரியும் பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளாா். ஆனால் அந்தப் பெண், பணம் வழங்கவில்லையாம்.

இதையடுத்து மோசஸ், அந்தப் பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவரது பெற்றோருக்கும் உறவினருக்கும் அனுப்பி பணம் கேட்டு மிரட்டிள்ளாா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அந்தப் பெண்ணின் பெற்றோா், அண்ணா நகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து, மோசஸை வியாழக்கிழமை கைது செய்தனா்.