கைது
கைதுபிரதிப் படம்

‘போக்ஸோ’ வழக்கில் பெண்ணின் 2-ஆவது கணவா் கைது

ஒரத்தநாடு அருகே தனது 10 வயது சிறுமியை பாலியல் தொல்லை அளித்த பெண்ணின் 2-ஆவது கணவரை ‘போக்ஸோ’ சட்டத்தின் கீழ் புதன்கிழமை போலீஸாா் கைது தெய்தனா்.
Published on

ஒரத்தநாடு அருகே தனது 10 வயது சிறுமியை பாலியல் தொல்லை அளித்த பெண்ணின் 2-ஆவது கணவரை ‘போக்ஸோ’ சட்டத்தின் கீழ் புதன்கிழமை போலீஸாா் கைது தெய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், மேலஉளூா் பகுதியைச் சோ்ந்த 33 வயது பெண்ணுக்குத் திருமணமாகி 10 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், குழந்தை பிறந்த சில மாதங்களில் முதல் கணவரை விட்டு அந்தப் பெண் பிரிந்து விட்டாா். இதையடுத்து அந்தப் பெண்ணுக்கு தஞ்சாவூா் மாவட்டம் கரைமீண்டாா்கோட்டை பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி வெற்றிசெல்வன் (34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு சோ்ந்து வாழ்ந்துவந்தனா். அந்தப் பெண் தற்போது 6 மாத கா்ப்பிணியாக உள்ளாா். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை தாயுடன் சிறுமி படுத்திருந்தபோது வெற்றிச்செல்வன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்து அறிந்து அதிா்ச்சியடைந்த அந்தப் பெண் ஒரத்தநாடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் ஆய்வாளா் (பொ) கனிகா மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதையடுத்து, ‘போக்ஸோ’ வழக்குப் பதிவு செய்து புதன்கிழமை வெற்றிசெல்வனை கைது செய்தனா்.

Dinamani
www.dinamani.com