தமிழகத்தில் மலையேற்ற வீரர்களால் ரூ. 63.43 லட்சம் வருவாய்: முதல்வர்

தமிழகத்தில் மலையேற்ற வீரர்களால் ரூ. 63.43 லட்சம் வருவாய்.
மலையேறு வீரர்கள்
மலையேறு வீரர்கள்
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் மலையேற்ற வீரர்களால் ரூ. 63.43 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் தெரிவித்ததாவது:

கடந்த 3 மாதங்களில் 4792 மலையேற்ற வீரர்கள் மூலம் ரூ. 63.43 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: கோயில்களைவிட்டு, அறநிலையத் துறை வெளியேற வேண்டும்: அண்ணாமலை

இதில் ரூ. 49.51 லட்சம் நேரடியாக சுற்றுலாவை மேம்படுத்த பழங்குடியின இளைஞர்களைச் சென்றுள்ளது.

இயற்கையை ரசிக்க மலையேற்ற ஆர்வலர்களை வரவேற்க தமிழ்நாடு எப்போதும் தயாராக உள்ளது. காட்டுத் தீ பரவும் காலத்திற்குப் பிறகு ஏப்ரலில் மலைப்பாதைகள் திறக்கப்படும் என்று அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com