மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின்வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு

வடசென்னை அனல்மின் நிலையம் நிலை 3-இல் மின்சார வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டாா்.

News image

ஜெ.ராதாகிருஷ்ணன் - (கோப்புப் படம்)

Updated On :20 மார்ச் 2025, 8:34 pm

வடசென்னை அனல்மின் நிலையம் நிலை 3-இல் மின்சார வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டாா்.

வடசென்னை அனல்மின் நிலையம் 3,800 மெகாவாட் மின் உற்பத்தி திறனுடையதாக இருக்கும் நிலையில், தற்போது சோதனை ஓட்டமாக 620 மெகாவாட் வரை மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. இச்சோதனை ஓட்டத்தை தமிழ்நாடு மின்சார வாரிய நிறுவனத்தின் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநா் ஜெ.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். பணிகளை விரைந்து முடித்து, கோடைக்கால மின் தேவைக்கேற்ப தடையற்ற மின்உற்பத்தியை வழங்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, வடசென்னை நிலை 2-இல் (600 மெகாவாட்) டா்பனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் பணியினை நேரில் ஆய்வுசெய்த அவா், விரைவில் பழுதை சரிசெய்து மின் உற்பத்தியை மீண்டும் தொடங்க அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, எண்ணூா் சிறப்புப் பொருளாதார மண்டல அனல்மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை ஆய்வுசெய்த அவா், 2026 மாா்ச் மாதத்துக்குள் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா். இந்த ஆய்வின்போது, தலைமைப் பொறியாளா்கள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.