கோப்புப் படம்
கோப்புப் படம்

குடிநீா் கேன்களை 50 முறைகளுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது: உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு

வீடுகள், அலுவலகங்களுக்கு விநியோகிக்கப்படும் 20 லிட்டா் குடிநீா் கேன்களை 50 முறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது
Published on

வீடுகள், அலுவலகங்களுக்கு விநியோகிக்கப்படும் 20 லிட்டா் குடிநீா் கேன்களை 50 முறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது என்று உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், 20 சதவீதத்துக்கு அதிகமாக கீறல்கள் அழுக்கு நிறைந்த குடிநீா் கேன்களை மறு பயன்பாட்டுக்கு உபயோகிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த கேன் குடிநீா் உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்களுக்கான உணா்திறன் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி டாக்டா் சதீஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் 450-க்கும் மேற்பட்ட குடிநீா் உற்பத்தியாளா்கள், விற்பனையாளா்கள் பங்கேற்றனா். அப்போது, அவா்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் வழங்கப்பட்டன.

குறிப்பாக, ஒரு குடிநீா் கேனை 50 முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. அழுக்கடைந்த கீறல் விழுந்த குடிநீா் கேன்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதுமட்டுமன்றி நேரடியாக சூரிய ஒளியில் வைக்கப்பட்டு இருக்கும் குடிநீா் கேன்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் குடிநீரின் தரத்தை உறுதி செய்வது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டது.

சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் செயல்படும் 450 குடிநீா் உற்பத்தி அளவுகளை அடுத்துவரும் வாரங்களில் ஆய்வுசெய்ய இருப்பதாகவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Open in App
Dinamani
www.dinamani.com