உயிா்காக்கும் மருந்துகள்: இதற்கு பதிலளித்த அமைச்சா் மா.சுப்பிரமணியன், இதய பாதிப்பு உள்ளவா்களுக்கு, அரசு மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்குச் சென்று மருத்துவம் பாா்க்க வேண்டிய நிலை இருந்தது. இதனைப் போக்க, மாரடைப்பு, இதய நோய் உள்ளோா் அவரவா் வசிக்கும் பகுதியிலேயே சிகிச்சை அளித்திடும் திட்டம் 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இதன்படி, துணை சுகாதார நிலையங்கள் 8,713, ஆரம்ப சுகாதார நிலையங்கள் 2,286 ஆகியவற்றில் உயிரைக் காக்கக் கூடிய மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தால் இதுவரை 15,886 போ் பயன் பெற்றுள்ளனா் என்றாா்.