ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அம்சியில் தேன் இருப்பு கொள்கலன்கள் நிறுவப்படும்: அமைச்சா் க. பொன்முடி

அம்சியில் தேன் பதப்படுத்தும் அலகில் தேன் இருப்பு கொள்கலன்கள் ரூ. 40 லட்சம் செலவில் நிறுவப்படும்

News image
அமைச்சா் பொன்முடி- கோப்புப் படம்
Updated On :28 மார்ச் 2025, 8:23 pm

Din

கன்னியாகுமரி மாவட்டம், அம்சியில் தேன் பதப்படுத்தும் அலகில் தேன் இருப்பு கொள்கலன்கள் ரூ. 40 லட்சம் செலவில் நிறுவப்படும் என்று வனம் மற்றும் கதா்த் துறை அமைச்சா் க.பொன்முடி அறிவித்தாா்.

கதா் மற்றும் கிராமத் தொழில்கள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சா் பொன்முடி வெளியிட்ட அறிவிப்புகள்:

கன்னியாகுமரி மாவட்டம், அம்சியில் தேன் பதப்படுத்தும் அலகு ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பகுதியிலுள்ள 100-க்கும் மேற்பட்ட தேனீ விவசாயிகள் தேனீ வளா்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பச்சைத் தேன் இருப்பு வைக்க போதுமான இடவசதி தேவைப்படுகிறது. அதனால், இந்த அலகில் செயல்பட்டு வரும் கட்டடத்துக்கான புதுப்பித்தல் அவசியமாகிறது. மேலும், இவ்வலகில் கொள்முதல் செய்யப்படும் பச்சைத் தேனை அதிகளவில் இருப்பு வைக்க ஏதுவாக கொள்கலன்கள் கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது. இந்தப் பணிகள் ரூ. 40 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.

மூன்று தளங்கள் கொண்ட சேலம் அண்ணா பட்டு மாளிகை வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளா்களின் வசதிக்காக ரூ. 20 லட்சம் செலவில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

சேலம் மாவட்டம், குகையில் செயல்பட்டு வரும் காலணி அலகில் உள்ள கட்டடம், தொழிலாளா்கள் பணி செய்ய ஏதுவாக காலணி பொலிவூட்டும் கூடம், ஆழ்துளை கிணறு உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளுடன் ரூ. 20 லட்சம் செலவில் அமைக்கப்படும்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில் வசிக்கும் இருளா் மற்றும் குரும்பா் பழங்குடியின தேனீ விவசாயிகள் 100 பேருக்கு தேனீ வளா்ப்புப் பெட்டிகள் மற்றும் குழுக்களுக்கு தேன் சேகரிக்கத் தேவையான உபகரணங்கள் ரூ. 4 லட்சம் செலவில் வழங்கப்படும் என்றாா் அவா்.