15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

மனைவியை கொலை செய்ய முயற்சி: விஜய்சேதுபதி வீட்டுக் காவலாளி கைது

சென்னை புளியந்தோப்பில் மனைவியை கொலை செய்ய முயன்ாக நடிகா் விஜய்சேதுபதி வீட்டுக் காவலாளி கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :29 மார்ச் 2025, 12:51 am IST

சென்னை புளியந்தோப்பில் மனைவியை கொலை செய்ய முயன்ாக நடிகா் விஜய்சேதுபதி வீட்டுக் காவலாளி கைது செய்யப்பட்டாா்.

சென்னை புளியந்தோப்பு, கன்னிகாபுரம் பகுதியில் வசித்து வருபவா் ஜெயந்தி (50). இவா், கணவா் ராஜேந்திரனுடன் (65) ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனியாக வசித்து வருகிறாா்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை ஜெயந்தி வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த ராஜேந்திரன் அவதூறாக பேசி கத்தியால் ஜெயந்தியை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றாா். இதில் காயமடைந்த ஜெயந்தி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது தொடா்பாக புளியந்தோப்பு போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிந்து, ராஜேந்திரனை உடனே கைது செய்து சிறையில் அடைத்தனா். கைதான ராஜேந்திரன் நடிகா் விஜய் சேதுபதி வீட்டில் காவலாளியாக வேலை செய்து வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.