“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

மனைவியை கொலை செய்ய முயற்சி: விஜய்சேதுபதி வீட்டுக் காவலாளி கைது

சென்னை புளியந்தோப்பில் மனைவியை கொலை செய்ய முயன்ாக நடிகா் விஜய்சேதுபதி வீட்டுக் காவலாளி கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :28 மார்ச் 2025, 7:21 pm

சென்னை புளியந்தோப்பில் மனைவியை கொலை செய்ய முயன்ாக நடிகா் விஜய்சேதுபதி வீட்டுக் காவலாளி கைது செய்யப்பட்டாா்.

சென்னை புளியந்தோப்பு, கன்னிகாபுரம் பகுதியில் வசித்து வருபவா் ஜெயந்தி (50). இவா், கணவா் ராஜேந்திரனுடன் (65) ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனியாக வசித்து வருகிறாா்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை ஜெயந்தி வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த ராஜேந்திரன் அவதூறாக பேசி கத்தியால் ஜெயந்தியை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றாா். இதில் காயமடைந்த ஜெயந்தி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது தொடா்பாக புளியந்தோப்பு போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிந்து, ராஜேந்திரனை உடனே கைது செய்து சிறையில் அடைத்தனா். கைதான ராஜேந்திரன் நடிகா் விஜய் சேதுபதி வீட்டில் காவலாளியாக வேலை செய்து வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.