பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஜாதி வாரி கணக்கெடுப்பு: ஓ.பன்னீா்செல்வம் வரவேற்பு

ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டியிருப்பதை முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வரவேற்றுள்ளாா்.

News image
ஓ. பன்னீா்செல்வம்
Updated On :1 மே 2025, 7:22 pm

Din

ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டியிருப்பதை முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வரவேற்றுள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அனைவருக்கும் சம உரிமையும், சம வாய்ப்பும் வழங்க வேண்டுமென்றால், ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டியது அவசியம் என்ற நிலை இருந்தது.

இதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு இருந்த நிலையிலும், இதன் அடிப்படையில் கா்நாடகம், பிகாா் போன்ற மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையிலும், இதை நிறைவேற்ற திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

மாறாக, ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் திமுக அரசு தீா்மானம் நிறைவேற்றியது. இதைக் கண்டித்து நான் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் அறிக்கைகள் விடுத்தனா்.

இந்த நிலையில், பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சோ்த்து ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது எனத் தெரிவித்துள்ளாா் ஓ.பன்னீா்செல்வம்.