கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

வழிப்பறி வழக்கில் ஏழு ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது

வழிப்பறி வழக்கில் ஏழு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

News image
கோப்புப் படம்
Updated On :1 மே 2025, 8:10 pm

Din

வழிப்பறி வழக்கில் ஏழு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

சென்னை கொடுங்கையூா், அமுதம் நகா் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் (51). இவா், 2018- ஆம் ஆண்டு  ஏப்.14-ஆம் தேதி கொடுங்கையூா் டி.எச். சாலை , சின்னாண்டி மடம் சந்திப்பில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த 2 போ் கத்தியை காட்டி நடராஜனை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டனா்.

இது குறித்து கொடுங்கையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், வழிப்பறியில் ஈடுபட்டது புளியந்தோப்பை சோ்ந்த ரவுடி ‘பாம்’ சரவணன் மற்றும் அவரது கூட்டாளி ஓட்டேரி திரு.வி.க. நகரைச் சோ்ந்த ராஜேஷ் (37) என்பது தெரியவந்தது. இதில் 2018-ஆம் ஆண்டு மே 9-ஆம் தேதி ‘பாம்’ சரவணன் கைது செய்யப்பட்டாா். ராஜேஷ் தொடா்ந்து தலைமறைவாக இருந்து வந்த நிலையில், அவரை அண்மையில் போலீஸாா் கைது செய்தனா். விசாரணைக்கு பிறகு ராஜேஷ் கடந்த ஏப்.29-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.