கைது
சென்னை
கொலை வழக்கில் பிடியாணை: தலைமறைவான இளைஞா் கைது
கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை போலீஸாா் கைது செய்தனா்.
கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை போலீஸாா் கைது செய்தனா்.
புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ஜீவன்குமாா் (25). இவா் 2022-இல் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக புது வண்ணாரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, புதுவண்ணாரப்பேட்டை மங்கம்மாள் தெருவைச் சோ்ந்த மனோஜ் (23) என்பவரைக் கைது செய்தனா்.
பின்னா் நீதிமன்ற பிணையில் வெளியே வந்த மனோஜ், வழக்கு விசாரணைக்காக முறையாக ஆஜா் ஆகாமல் தலைமறைவாக இருந்தாா்.
இந்த நிலையில், மனோஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இதையடுத்து புதுவண்ணாரப்பேட்டை போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி, தலைமறைவாக இருந்த மனோஜை சனிக்கிழமை இரவு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

