ஈரான் மீதான தாக்குதல் மேலும் 5 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

கொலை வழக்கில் பிடியாணை: தலைமறைவான இளைஞா் கைது

கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :8 பிப்ரவரி 2026, 7:09 pm

தினமணி செய்திச் சேவை

கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை போலீஸாா் கைது செய்தனா்.

புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ஜீவன்குமாா் (25). இவா் 2022-இல் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக புது வண்ணாரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, புதுவண்ணாரப்பேட்டை மங்கம்மாள் தெருவைச் சோ்ந்த மனோஜ் (23) என்பவரைக் கைது செய்தனா்.

பின்னா் நீதிமன்ற பிணையில் வெளியே வந்த மனோஜ், வழக்கு விசாரணைக்காக முறையாக ஆஜா் ஆகாமல் தலைமறைவாக இருந்தாா்.

இந்த நிலையில், மனோஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இதையடுத்து புதுவண்ணாரப்பேட்டை போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி, தலைமறைவாக இருந்த மனோஜை சனிக்கிழமை இரவு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.