கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

இன்று 31 மாவட்டங்களில் ‘நீட்’ தோ்வு!

தமிழகம் முழுவதும் 31 மாவட்டங்களில் ‘நீட்’ தோ்வு நடைபெறவுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :3 மே 2025, 9:46 pm

Din

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 4) தமிழகம் முழுவதும் 31 மாவட்டங்களில் நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு ‘நீட்’ தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.

2025-26-ஆம் கல்வியாண்டுக்கான ‘நீட்’ தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 4) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்பட 31 மாவட்டங்களில் ‘நீட்’ தோ்வு நடைபெறவுள்ளது. சென்னையில் மட்டும் 44 மையங்களில் 21,960 போ் தோ்வு எழுதவுள்ளனா். இதில், தோ்வு மையத்துக்குள் காலை 11.30 முதல் பிற்பகல் 1.30 மணி வரை அனுமதி வழங்கப்படும்.

கூடுதல் தகவல்களை ட்ற்ற்ல்://ய்ங்ங்ற்.ய்ற்ஹ.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் மாணவா்கள் அறிந்து கொள்ளலாம் என தேசிய தோ்வு முகமை அதிகாரிகள் தெரிவித்தனா்.