ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கோவை - திருப்பூர் எல்லை வெடிமருந்து ஆலையில் பயங்கர விபத்து

மல்லேகவுண்டம்பாளையத்தில் இயங்கி வரும் வெடிமருந்து ஆலையில் இன்று (மே 5) பிற்பகல் பயங்கர வெடி விபத்து.

News image
Updated On :5 மே 2025, 11:51 am

DIN

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட எல்லைப் பகுதியான சுல்தான்பேட்டை அருகே மல்லேகவுண்டம்பாளையத்தில் இயங்கி வரும் வெடிமருந்து ஆலையில் இன்று (மே 5) பிற்பகல் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

உத்தரகாண்டைச் சேர்ந்த ராஜ் என்பவருக்குச் சொந்தமான இந்த ஆலை, ராணுவத்திற்கு தோட்டா தயாரிக்கும் வெடிமருந்து உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இன்று பிற்பகல் 1 மணியளவில், ஆலையில் வெடிமருந்து இருப்பு வைக்கப்பட்டிருந்த குடோனில் திடீரென ஏற்பட்ட வெடிப்பு, அந்த கிடங்கை முற்றிலுமாக தரைமட்டமாக்கியது.

இந்த வெடிப்பின் சத்தம் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவுக்கு கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தை அடுத்து, காமநாயக்கன்பாளையம் மற்றும் சுல்தான்பேட்டை காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

தீயணைப்புத் துறையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆலைக்குள் காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் தவிர வேறு யாருக்கும் நுழைய அனுமதி இல்லை. அதிருஷ்டவசமாக, விபத்து நடந்தபோது ஆலையில் பணியில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் உயிர் தப்பியுள்ளனர்.

இருப்பினும், உயிரிழப்பு ஏற்பட்டதா?, எவ்வளவு அளவு வெடிமருந்து வெடித்தது? என்பது குறித்த விவரங்கள் காவல்துறை விசாரணைக்கு பிறகே தெரியவரும்.

இந்த வெடி விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆலையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து சுல்தான் பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.