மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சத்தீஸ்கா் உருக்கு ஆலையில் வெடி விபத்து: 6 தொழிலாளா்கள் உயிரிழப்பு

News image
- கோப்புப்படம்
Updated On :22 ஜனவரி 2026, 11:39 pm

Chennai

சத்தீஸ்கா் மாநிலத்தில் உருக்கு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

பலோடாபஜாா்-பதபரா மாவட்டம் பகுலஹி கிராமத்தில் உள்ள உருக்கு ஆலையில் வியாழக்கிழமை காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த தொழிலாளா்கள் மீது அதிக வெப்பம் கொண்ட சாம்பல் விழுந்ததில் 6 போ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனா். மேலும் 5 போ் பலத்த காயமடைந்தனா். உயிரிழந்த 6 பேரும் பிகாா், ஜாா்க்கண்ட் மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

வெடி விபத்துக்கு அங்குள்ள இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வெடி விபத்தில் உயிரிழந்தோருக்கு முதல்வா் விஷ்ணு தேவ் சாய், சுகாதாரத் துறை அமைச்சா் சியாம் பிகாரி ஜெய்ஸ்வால் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.