சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் காலமானார்!

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் காலமானார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத்..
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத்..
Published on
Updated on
1 min read

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் மாரடைப்பு காரணமாக நேற்றிரவு 11.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 56.

சத்திய நாராயண பிரசாத் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2021 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். அதன் பின்னர் மார்ச் 2023-ல் நிரந்தரமாக நியமிக்கப்பட்டார்.

தற்போது உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் 63 நீதிபதிகளில் பணி அனுபவ வரிசையில் அவர் 42-வது இடத்தில் இருந்தார். சத்திய நாராயண பிரசாத் பதவி உயர்வு பெறுவதற்கு முன்னதாக, 1997 ஆம் ஆண்டிலிருந்து 24 ஆண்டுகள் வழக்குரைஞராகப் பயிற்சி பெற்றுள்ளார்.

தஞ்சாவூரில் பிறந்தவரான சத்திய நாராயண பிரசாத், உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு, பிஎஸ்என்எல், சென்னை துறைமுக அறக்கட்டளை, இந்தியன் வங்கி, தெற்கு ரயில்வே உள்ளிட்ட பல்வேறு அரசு அமைப்புகளுக்கான ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com