மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மதுரையில் மழையால் வானில் சுமார் 1 மணி நேரம் வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறக்கம்!

மதுரையில் மழை: சுமார் 1 மணி நேரம் வானில் வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறக்கம்!

News image

மதுரை விமான நிலையம்

AAI/X

Updated On :15 மே 2025, 2:40 pm

DIN

மதுரை: மதுரையில் இன்று(மே 15) கொட்டித் தீர்த்த பலத்த மழையால், மதுரை விமான நிலையத்தில் மழை நீர் தேங்கியிருந்தது. விமான ஓடுபாதையில் மழைநீர் வடியாததால் விமான சேவை பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஹைதராபாத்திலிருந்து இன்று பகல் மதுரைக்கு புறப்பட்ட விமானம் ஒன்று குறிப்பிட்ட நேரத்தில் மதுரையில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அந்த விமானம் மதுரை புறநகர்ப் பகுதிகளைச் சுற்றியபடி வானில் சுமார் 1 மணி நேரம் வட்டமடித்தபடி பறந்ததை காண முடிந்தது.

இந்த நிலையில், மாலை 6 மணிக்கு விமான ஓடுபாதையில் தேங்கியிருந்த தண்ணீர் வடிந்துவிட்ட நிலையில், அந்த விமானம் 6.05 மணிக்கு பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.