சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

10ஆம் வகுப்பு தேர்வு முடிவு: சிவகங்கை முதலிடம்!

விருதுநகரில் 97.45%, தூத்துக்குடியில் 96.76% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

News image
Updated On :16 மே 2025, 4:37 am

DIN

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் மாவட்டவாரியான தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை முதலிடம் பிடித்துள்ளது.

சிவகங்கையில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்களில் 98.31% மாணவ, மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக விருதுநகர் - 97.45%

தூத்துக்குடி - 96.76%

கன்னியாகுமரி - 96.66%

திருச்சி 96.61%

அரசுப் பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்

அரசுப் பள்ளிகளில் இம்முறை அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிவகங்கை - 97.49%

விருதுநகர் - 95.57%

கன்னியாகுமரி - 95.47%

திருச்சி - 95.42%

தூத்துக்குடி - 95.40%

தேர்வு எழுதிய மொத்த மாணாக்கர்கள் 8,71,239. இதில் 817261 மாணாக்கர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 93.80% ஆகும்.

தேர்வு எழுதிய 4,35,119 மாணவிகளில் 4,17,183 மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 95.88% தேர்ச்சி ஆகும்.

தேர்வு எழுதிய 4,36,120 மாணவர்களில் 4,00,078 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 91.74% தேர்ச்சி ஆகும்.

தேர்வு எழுதிய 12,290 மாற்றும் திறனாளி மாணாக்கர்களில் 11,409 மாணாக்கர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 92.83% ஆகும்.

தேர்வு எழுதிய 237 சிறைவாசிகளில் 230 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97.05% தேர்ச்சி ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.