
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் மாவட்டவாரியான தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை முதலிடம் பிடித்துள்ளது.
சிவகங்கையில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்களில் 98.31% மாணவ, மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக விருதுநகர் - 97.45%
தூத்துக்குடி - 96.76%
கன்னியாகுமரி - 96.66%
திருச்சி 96.61%
அரசுப் பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்
அரசுப் பள்ளிகளில் இம்முறை அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிவகங்கை - 97.49%
விருதுநகர் - 95.57%
கன்னியாகுமரி - 95.47%
திருச்சி - 95.42%
தூத்துக்குடி - 95.40%
தேர்வு எழுதிய மொத்த மாணாக்கர்கள் 8,71,239. இதில் 817261 மாணாக்கர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 93.80% ஆகும்.
தேர்வு எழுதிய 4,35,119 மாணவிகளில் 4,17,183 மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 95.88% தேர்ச்சி ஆகும்.
தேர்வு எழுதிய 4,36,120 மாணவர்களில் 4,00,078 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 91.74% தேர்ச்சி ஆகும்.
தேர்வு எழுதிய 12,290 மாற்றும் திறனாளி மாணாக்கர்களில் 11,409 மாணாக்கர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 92.83% ஆகும்.
தேர்வு எழுதிய 237 சிறைவாசிகளில் 230 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97.05% தேர்ச்சி ஆகும்.
இதையும் படிக்க | பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியானது! 92.09% தேர்ச்சி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.