
அரபிக்கடல் பகுதியில் வரும் 22 ம் தேதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது.
காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியானது மத்திய கிழக்கு கர்நாடகத்தை ஒட்டிய அரபிக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியானது மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது கணிக்கப்பட்டுள்ளது.
இன்று கிருஷ்ணகிரி திருப்பத்தூர், தருமபுரி, சேரம், நாமக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.
தொடர்ந்து மே 20 வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.