இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சாத்தான்குளம் அருகே கிணற்றில் பாய்ந்த ஆம்னி வேன்: 5 பேரும் பலி

சாத்தான்குளம் அருகே ஆம்னி வேன் கிணற்றில் பாய்ந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள்.

News image
விபத்து ஏற்பட்ட இடம்.
Updated On :17 மே 2025, 4:36 pm

DIN

சாத்தான்குளம் அருகே ஆம்னி வேன் கிணற்றில் பாய்ந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் சாலையோரம் இருந்த 50 அடி ஆழ கிணற்றுக்குள் சனிக்கிழமை பாய்ந்தது.

பொக்லைன் மூலம் நடந்த மீட்பு முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் மீட்புக்குழு வீரர்கள் மீட்டனர். சுமார் 5 மணி நேர போராட்டத்திற்குப் பின் கிணற்றில் இருந்து வேன் மீட்கப்பட்டது.

3 பேர் ஆம்னி வேனில் இருந்து வெளியேறிய நிலையில் மற்ற 5 பேரும் பலியானார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கிணற்றில் ஆம்னி வேன் பாய்ந்த விபத்தில் 5 பேர் பலியான நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.