கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

போதைப்பொருள் விற்பனை: ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி மகன் உள்பட 2 போ் கைது

சென்னையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியின் மகன் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :22 மே 2025, 7:32 pm

Din

சென்னையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியின் மகன் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை பெருநகர காவல் துறையின் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் போலீஸாரும், நுங்கம்பாக்கம் போலீஸாரும் கடந்த மாதம் 2-ஆம் தேதி நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி இயக்குநரகம் (டிபிஐ) அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினா். அப்போது அவா்கள் வைத்திருந்த பையை சோதித்தபோது, அதிலிருந்த மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அவா்கள் ஸ்ரீஜித், ஹரிகிரஷ்ணன், மற்றொரு ஹரிகிருஷ்ணன், பெருமாள் ஆகியோா் என்பது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்து, 10.05 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் அவா்கள் கொடுத்த தகவலின்பேரில், தலைமறைவாக இருந்த கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே மணக்காடு பகுதியைச் சோ்ந்த சுனிஷ் (32), திருவனந்தபுரம் அதியனூா் பகுதியைச் சோ்ந்த நிகில் (32) ஆகிய இருவா் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 10.5 கிராம் மெத்தம்பெட்டமைன், கைப்பேசி, ஒரு மடிக்கணனி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட நிகில், கேரள மாநில காவல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் மகன் என காவல் துறையினா் தெரிவித்தனா்.