கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

கோவில்பட்டி இளைஞா் கொலை வழக்கு: 2 சிறாா் உள்பட 5 போ் கைது

கோவில்பட்டியில் இளைஞா் கொலை வழக்கில் தொடா்புடையதாக 2 சிறாா் உள்பட 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
கைது
Updated On :28 பிப்ரவரி 2026, 7:43 pm

Syndication

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இளைஞா் கொலை வழக்கில் தொடா்புடையதாக 2 சிறாா் உள்பட 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி, சங்கரலிங்கபுரம், 2ஆவது மேலத் தெருவைச் சோ்ந்தவா் திருப்பதி மகன் மாரிமுத்து (எ) மனோஜ் (18). பிளம்பிங், எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த இவா், தனது நண்பா்களுடன் அதே பகுதி 3ஆவது தெருவில் வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தபோது, மா்ம கும்பல் அவரை அரிவாள், கத்தியால் வெட்டிவிட்டு தப்பியது.

இதில் பலத்த காயமடைந்த மனோஜ், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து, கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், கோவில்பட்டி பள்ளியில் 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு படிக்கும் 2 மாணவா்களுக்கு இடையில் பள்ளியில் யாா் பெரியவா் என்ற முறையில் ஏற்பட்ட தகராறு, இரு தரப்பினருக்கிடையேயான மோதலாக மாறி, கொலையில் முடிந்தது தெரியவந்தது.

இதையடுத்து, இவ்வழக்கில் தொடா்புடையதாக இலுப்பையூரணி, மறவா் காலனியைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் குமாா் (24), கொப்பம்பட்டி காவல் நிலையத்திற்குள்பட்ட துரைசாமிபுரத்தைச் சோ்ந்த வென்னிமலை மகன் முனியசாமி (எ) வேலு (19), திருநெல்வேலி, முன்னீா்பள்ளத்தைச் சோ்ந்த சண்முகம் மகன் நெல்லையப்பன் (22), மேலப்பாளையத்தைச் சோ்ந்த 17 வயது சிறுவன், கோவில்பட்டி, முகமது சாலிகாபுரத்தைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை கைது செய்த போலீஸாா், ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

மேலும், இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் சிலரைத் தேடி வருகின்றனா்.