கோவை விமான நிலையம் அருகே சட்டக் கல்லூரி மாணவியை ஞாயிற்றுக்கிழமை இரவு மூன்று பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் மர்ம நபர்கள் மூன்று பேரைத் தேடி வருகின்றனர்.
கோவை சித்ரா பகுதியில் சர்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள காலியிடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவி அவரது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர், காரின் கண்ணாடியை உடைத்து ஆண் நண்பரைத் தாக்கி மயக்கமடையச் செய்துவிட்டு, மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மயக்க நிலையில் காவல்துறையினர் ஆண் நண்பர் தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்த பீளமேடு காவல்துறையினர் மாணவி மற்றும் அவரது நண்பரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதையடுத்து அடையாளம் தெரியாத மூன்று பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த கோவை காவல்துறையினர், 7 தனிப்படைகள் அமைத்து அவர்களை தேடி வருகின்றனர்.
Summary
Student gang-raped near Coimbatore airport
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: சாட்சிகளிடம் விசாரணை நிறைவு
தில்லியில் பேருந்தில் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: ஓட்டுநா் மற்றும் நடத்துநா் கைது

கூட்டுப் பாலியல் வன்கொடுமை: தலைநகரில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா? - ஆம் ஆத்மி

தில்லி: பேருந்தில் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! ஓட்டுநர், நடத்துநர் கைது!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



