சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!

சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை தொடர்பாக...
அமலாக்கத் துறை (கோப்புப்படம்)
அமலாக்கத் துறை (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் அமைந்தகரை, சூளைமேடு, நெற்குன்றம் உள்ளிட்ட 5 இடங்களில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகார் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று(நவ. 4) காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மற்றும் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்துவரும் தொழிலதிபர்களின் வீடுகளில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.

சோதனை முழுமையாக நிறைவடைந்த பின்னரே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், நகை, பணம் குறித்த விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Enforcement officers are conducting raids at 5 locations in Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com