2026 பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி வெளியூரில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ரயில் போக்குவரத்தையே பெரிதும் நம்பியிருக்கின்றனர்.
அந்தவகையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
2026 ஆம் பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி(தை 1, வியாழக்கிழமை) வருகிறது.
இந்நிலையில் ஜனவரி 9 ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) பயணிப்பதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று(நவ. 10, திங்கள்) தொடங்கியுள்ளது.
முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே நெல்லை, பொதிகை, சிலம்பு, பாண்டியன் எக்ஸ்பிரஸ் போன்ற முக்கிய ரயில்களில் டிக்கெட் முழுவதும் தீர்ந்துவிட்டது. பல ரயில்களில் டிக்கெட் காத்திருப்பு பட்டிய்லில் உள்ளன.
தொடர்ந்து ஜன. 10 ஆம் தேதி, சனிக்கிழமை புறப்படுவதற்கு (நாளை)நவ. 11 ஆம் தேதியும்
ஜன. 11, ஞாயிறு புறப்படுவதற்கு நவ. 12 ஆம் தேதியும்
ஜன. 12, திங்கள் புறப்படுவதற்கு நவ. 13 ஆம் தேதியும்
ஜன. 13, செவ்வாய் புறப்படுவதற்கு நவ. 14 ஆம் தேதியும்
ஜன. 14, புதன் (பொங்கலுக்கு முந்தைய நாள்) புறப்படுவதற்கு நவ. 15 ஆம் தேதியும் முன்பதிவு தொடங்குகிறது.
அன்றைய நாளில் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது.
பொங்கல் பண்டிகை முடிந்து ஜன. 18(ஞாயிறு) திரும்புவதற்கு நவ. 19(புதன்) காலை முன்பதிவு தொடங்கும்.
Summary
Pongal train ticket bookings started
இதையும் படிக்க | சொல்லப் போனால்... சேர்க்கவா நீக்கவா, வாக்காளர் சிறப்பு திருத்தம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








