அடுத்த 3 மணி நேரத்துக்கு செங்கல்பட்டு உள்பட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று(நவ. 15) ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் சனிக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனேவே கூறியிருந்தது.
இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு(இரவு 7 மணி வரை) தமிழகத்தில் நாகப்பட்டினம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, கோயம்புத்தூர், விருதுநகர், திருப்பூர், கடலூர், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருவாரூர், விழுப்புரம் மாவட்டம் மற்றும் காரைக்கால், புதுச்சேரி பகுதியில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Rain update for next 3 hours
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

