மேட்டூர் அணை: தண்ணீர் திறப்பு குறைப்பு!

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
Mettur dam - DPS photo
மேட்டூர் அணைDPS
Published on
Updated on
1 min read

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் பாசன தேவை குறைந்த காரணத்தால் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 6,000 கனஅடியிலிருந்து வினாடிக்கு 3,000 கன அடியாக குறைக்கப்பட்டது.

விராலிமலை: விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,026 கனஅடியிலிருந்து வினாடிக்கு 5,714 கனஅடியாக குறைந்துள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதங்கள் வழியாக வினாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.11அடியிலிருந்து 111.96 அடியாக குறைந்தது. நீர் இருப்பு 81.22 டிஎம்சியாக உள்ளது.

Summary

The amount of water released from Mettur Dam for Cauvery Delta irrigation has been reduced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com