கோவை: பிரதமர் நரேந்திர மோடியின் கோவை வருகையை கண்டித்து கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய கூட்டமைப்பினர் 83 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்னும் சற்றுநேரத்தில் கோவைக்கு வருகிறார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் கோவை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது.
இதில், பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு, பிரதமர் மோடியை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது பேசிய விவசாயிகள் கூறியதாவது,
"மரபணு மாற்றப்பட்ட விதைகளை உருவாக்க ரூ. 500 கோடி ஒதுக்கிய பிரதமர் மோடிக்கு, இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க தார்மீக உரிமை இல்லை. மரபணு மாற்றப்பட்ட விதைகளை அனுமதிக்க கூடாது. நதி நீர் இணைப்பில் மத்திய அரசு பாராபட்சமாக நடந்து கொண்டிருக்கிறது.
10 ஆண்டுகளாக தென்னக நதிகளை இணைக்க மத்திய அரசு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு 2 மடங்கு விலை கொடுப்போம் என பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால் நெல் டன் ஒன்றுக்கு ரூ.7 ஆயிரம் உயர்த்துவது பதிலாக, வெறும் ரூ. 3 மட்டுமே உயர்த்தியுள்ளார். இயற்கை விவசாயத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவதில்லை. போலி விவசாயிகள் நடத்தும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்" என்று கூறினார்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 83 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
Summary
Black flag protest against Prime Minister Modi's visit! 83 people arrested in Coimbatore
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜூன் 7-இல் ஆளுநரை கண்டித்து கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்: வைகோ

முதல்வருக்கு எதிராக கருப்புக் கொடி: விவசாயிகள் சங்கத்தினா் கைது
உதயநிதிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



