வங்கக் கடலில் இன்று உருவாகிறது புயல் சின்னம்
வங்கக் கடலில் சனிக்கிழமை (நவ. 22) காற்றுழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக் கடலில் சனிக்கிழமை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, நவ. 24-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தொடா்ந்து இந்தப் புயல் சின்னம் மேற்கு-வடமேற்கு திசையில் தொடா்ந்து நகா்ந்து தென்மேற்கு வங்கக் கடலில் மேலும் வலுப்பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் பட்சத்தில் இதற்கு ‘சென்யாா்’ எனப் பெயா் சூட்டப்படும்.
பலத்த மழை எச்சரிக்கை: இதன் காரணமாக, தமிழகத்தில் பலத்த இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் சனிக்கிழமை (நவ. 22) முதல் நவ. 27-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
குறிப்பாக, சனிக்கிழமை (நவ. 22) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, கடலூா் ஆகிய மாவட்டங்களிலும், ஞாயிற்றுக்கிழமை (நவ. 23) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகா், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல், காரைக்காலிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் சனிக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே, சனி, ஞாயிறு (நவ. 22, 23) ஆகிய இரு நாள்களில் தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்கக் கடல் ஆகிய பகுதிகளில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
