வருகிற நவ. 25 ஆம் தேதி திருப்பூரில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
திருப்பூர் மாநகராட்சி முழுவதும் குப்பைகள் அள்ளப்படாமல் சுகாதார சீர்கேட்டால் அவதியுறும் நிலை இருக்கிறது. செயல்படாமல் இருக்கும் திருப்பூர் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்
சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில் ஈடுபட்டு வரும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களை திமுகவினர் மிரட்டி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வேடிக்கை பார்ப்பதைக் கண்டித்தும் இதற்கு காரணமான திமுக அரசைக் கண்டித்தும்
வருகிற நவம்பர் 25 ஆம் தேதி(செவ்வாய்க்கிழமை) திருப்பூரில் உள்ள திருப்பூர் குமரன் சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Summary
ADMK general secretary EPS announced that party protest in Tiruppur on Nov. 25
இதையும் படிக்க | ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் வரை ஓயமாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜூன் 18-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு | Nainar Nagendran |

பயிர்க்கடன் தள்ளுபடி, மின்வெட்டு... தவெக அரசு எதிராக அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

தூங்கா இரவுகளாக மாறிய கொடுமை! மின்வெட்டுக்கு நடவடிக்கை எடுக்க இபிஎஸ் வலியுறுத்தல்







