கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

காஞ்சிபுரத்தின் பிரச்னைகளை அடுக்கடுக்காகப் பேசிய விஜய்!

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அம்மாவட்டத்தின் பிரச்னைகளை அடுக்கடுக்காக முன்வைத்து விஜய் பேசினார்.

News image
விஜய்
Updated On :23 நவம்பர் 2025, 6:33 am

இணையதளச் செய்திப் பிரிவு

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அம்மாவட்டத்தின் பிரச்னைகளை அடுக்கடுக்காக முன்வைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (நவ., 23) நடைபெற்றது. இதில் விஜய் கலந்துகொண்டு காஞ்சிபுரத்தின் பிரச்னைகள் குறித்து உரையாற்றினார்.

விவசாயிகளை கண்டுகொள்ளாமல் அரசு கைவிட்டுவிட்டது. காஞ்சிபுரத்தில் பட்டு தயாரித்துக்கொடுக்கும் நெசவாளர்கள் நிலை மோசமாக இருக்கிறது.

நெசவாளர்களுக்கு ஒருநாள் கூலி 500 ரூபாய்தான். இதனை அதிகரிக்க வலியுறுத்தி பல போராட்டம் நடைபெற்றது. வடகிழக்கு பருவமழை அந்த ஊதியத்துக்கும் வஞ்சகம் செய்துவிட்டது.

காஞ்சிபுரத்தின் பேருந்து நிலையம் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டியது. இதனை புதுப்பிக்கக்கூட முடியவில்லை. பாலாற்றில் ரூ. 4,730 கோடி மதிப்பிலான மணலை கொள்ளையடித்துள்ளனர்.

அரசாங்கத்தால் நல்ல இடத்தை தேர்வு செய்து பேருந்து நிலையம் கட்ட முடியாதா? மக்களை பற்றி யோசிப்பதற்கே அவர்களுக்கு (திமுக) நேரம் இல்லை. இதுதான் அவர்களின் பிரச்னை.

வாலாஜாபாத் அருகே அவலூர் ஏரி உள்ளது. அது பாலாற்றை விட உயரமாக உள்ளது. இதனால் ஆற்று நீர் ஏரிக்குச் செல்ல முடியாத நிலை. இதனை சரி செய்தால் பல ஏக்கர் விவசாயம் செழிக்கும். இதனை சரி செய்ய எத்தனை ஆண்டுகள் விவசாயிகள் மனு கொடுக்க வேண்டும்?

பரந்தூர் விமான நிலைய பிரச்னையில் விவசாயிகள் பக்கம்தான் தவெக நிற்கும். காரணங்கள் கூறி திமுக அரசு தப்பிக்க முடியாது.

மக்கள் பிரச்னைகளை பேசுவதால் நம் மீது ஆத்திரம் வரத்தான் செய்யும். சட்டப்பேரவை தொடங்கி சாதாரண நிகழ்ச்சி வரை தவெக மீதான அவதூறுதான். இதற்கு நிச்சயம் பதில் அளிப்போம் என விஜய் பேசினார்.

summary

TVK vijay speech about kanchipuram issue

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.