தென்காசி விபத்து: பலி 8 ஆக உயர்வு

தென்காசி விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.
விபத்துக்குள்ளான பேருந்துகள்.
விபத்துக்குள்ளான பேருந்துகள்.
Published on
Updated on
1 min read

தென்காசி விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.

நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சண்முகத்தாய் சிகிச்சை பலனின்றி பலியானார். இதையடுத்து விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், இடைக்கால் கிராமம், திருமங்கலம் -கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் எதிரெதிரே வந்த 2 தனியார் பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டது.

தென்காசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற தனியார் பேருந்தும் கோவில்பட்டியில் இருந்து தென்காசி வந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் பேருந்தின் முன்பாகம் முழுவதும் சேதமடைந்தது.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 3 பேருக்கு ஆயுள் தண்டனை

இந்த விபத்தில் 5 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் 50-க்கும் மேற்பட்டோர் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Summary

The death toll in the Tenkasi accident has risen to 8.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com