வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

வேதாரண்யத்திலிருந்து 110 கி.மீ. தொலைவில் டிட்வா புயல்! நாளை மாலை கரையைக் கடக்கும்!

வடக்கு - வடமேற்கு திசையில் 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது டிட்வா புயல்...

News image
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள டிட்வா புயல் - படம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
Updated On :29 நவம்பர் 2025, 4:26 pm

இணையதளச் செய்திப் பிரிவு

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள டிட்வா புயல் வேதாரண்யத்திலிருந்து 110 கி.மீ. தொலைவிலும் சென்னையில் இருந்து 110 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

இது, வடக்கு - வடமேற்கு திசையில் 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், நாளை (நவ., 30) அதிகாலை வட தமிழகம், புதுவை மற்றும் வடக்கு ஆந்திரக் கடல் பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதோடுமட்டுமின்றி, கரையைக் கடக்கும்போது, புயலின் மையப்பகுதி சென்னை கரையிலிருந்து வெறும் 25 கி.மீ. தொலைவில் நிலவ வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளை (நவ., 30) மாலை முதல் புயல் கரையைக் கடக்கக்த் தொடங்கும் என்றும் டிச. 1 வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிட்வா புயலால், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கும் இன்று சிவப்பு நிற (ரெட் அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு மிக கனமழை மற்றும் ஓரிரு இடங்களில் அதிகன மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும் விட்டு விட்டு கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், டிசம்பர் 1ஆம் தேதிக்குப் பிறகு மழை படிப்படியாகக் குறையும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மணிக்கு 70 முதல் 90 கி.மீ. வேகத்திலும், வட தமிழக கடலோர மாவட்டங்களில் மணிக்கு 60 முதல் 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

summary

cyclone Ditwah will cross the coast tomorrow evening

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.