அக்.6-ல் காட்டாங்குளத்தூரில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு மின்சார ரயில்கள்

காலாண்டு விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக காட்டாங்குளத்தூரில் இருந்து சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
Train
மின்சார ரயில் (கோப்புப்படம்)Din
Updated on
1 min read

காலாண்டு விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக காட்டாங்குளத்தூரில் இருந்து சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ஆயுத பூஜை மற்றும் காலாண்டு விடுமுறைக்காக சென்னையில் இருந்து மக்கள், கூட்டம் கூட்டமாக தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.

அதற்காக சிறப்பு பேருந்துகளும், சிறப்பு ரயிளும் இயக்கப்பட்டன.

காலாண்டு விடுமுறை முடிய இன்னும் 2 நாள்கள் மட்டும் உள்ளதால் மக்கள் மீண்டும் சிறப்பு ரயில் மற்றும் பேருந்துகளில் சென்னை திரும்புவர்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.88.78 ஆக நிறைவு!

இந்த நிலையில் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக காட்டாங்குளத்தூரில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த சிறப்பு ரயில்கள் அக்.6ம் தேதி அதிகாலை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com