தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தீபாவளி: திருநெல்வேலி - செங்கல்பட்டு சிறப்பு ரயில்

சென்ட்ரல் - மங்களூரு, எழும்பூா் - திருவனந்தபுரம், திருநெல்வேலி - செங்கல்பட்டு இடையே சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கம்..

News image

ரயில் (கோப்புப்படம்)

ANI

Updated On :11 அக்டோபர் 2025, 12:04 am

தினமணி செய்திச் சேவை

தீபாவளியை முன்னிட்டு சென்ட்ரல் - மங்களூரு, எழும்பூா் - திருவனந்தபுரம், திருநெல்வேலி - செங்கல்பட்டு இடையே சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: அக்.21,22 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியிலிருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06156) பிற்பகல் 1.15 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்:06155) செங்கல்பட்டிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 11.55 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

இந்த ரயில், திருநெல்வேலியிலிருந்து கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, அரியலூா், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூா் வழியாக செங்கல்பட்டு சென்றடையும்.

சென்னை ரயில்கள்: போத்தனூரிலிருந்து அக்.19-ஆம் தேதி இரவு 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06044) மறுநாள் காலை 8.45 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06001) சென்ட்ரலிலிருந்து அக்.20-இல் பிற்பகல் 12.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு மங்களூரு சென்றடையும்.

மங்களூரிலிருந்து அக்.21-இல் மாலை 4.35 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் ((எண்: 06002) மறுநாள் காலை 10.15 மணிக்கு சென்ட்ரல் சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06043) அக்.22-இல் சென்ட்ரலிலிருந்து பிற்பகல் 12.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10 மணிக்கு போத்தனூா் சென்றடையும். இந்த ரயில்கள், சென்ட்ரலிலிருந்து அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு வழியாக மங்களூரு சென்றடையும்.

அதேபோல், திருவனந்தபுரத்திலிருந்து அக்.21-இல் மாலை 5.10 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் (எண்: 06108) மறுநாள் காலை 11 மணிக்கு எழும்பூா் வந்தடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06107) எழும்பூரிலிருந்து அக்.22-இல் பிற்பகல் 1.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். இந்த ரயில், எழும்பூரிலிருந்து பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு வழியாக திருவனந்தபுரம் சென்றடையும்.

இந்த ரயில்களுக்கான முன்பதிவுகள் அக். 12-ஆம் தேதி காலை 8 முதல் தொடங்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.