தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

விளையாட்டுத் துறையிலும் இரட்டை இலக்க வளர்ச்சி: மு.க. ஸ்டாலின்

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025 நிறைவு விழாவில் முதல்வர் பேசியது குறித்து...

News image

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025 நிறைவு விழாவில் பேசும் முதல்வர் மு.க. ஸ்டாலின் - படம் - DIPR

Updated On :14 அக்டோபர் 2025, 7:14 pm IST

பொருளாதாரத்தில் எட்டிய இரட்டை இலக்க சாதனைப் பயணம், விளையாட்டுத் துறையிலும் எதிரொலிப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (அக். 14) தெரிவித்தார்.

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025 நிறைவு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்,

''தமிழ்நாட்டு விளையாட்டுத் துறையின் பொற்காலமாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது.

இந்த ஆண்டு முதலமைச்சர் கோப்பை போட்டிக்கு 16.28 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். தனிநபர் பிரிவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு ரூ. 1 லட்சம், ரூ. 75,000 மற்றும் ரூ. 50,000 பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

திறமையான வீரர்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்க ரூ. 37 கோடி பரிசுத் தொகையோடு போட்டி நடத்தப்படுகிறது. தமிழக வீரர்கள் ஒவ்வொருவரும் சாம்பியன்ஸ் என வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.

தேசிய, பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் சாதித்த 5,393 வீரர்களுக்கு தகுந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் எட்டிய இரட்டை இலக்க சாதனைப் பயணம், விளையாட்டுத் துறையிலும் எதிரொலிக்கிறது.

234 தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும். முதல்கட்டமாக தலா ரூ. 3 கோடியில் 75 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்கப்படுகிறது. வடசென்னையைச் சேர்ந்த கேரம் வீராங்கனை காசிமாவுக்கு ரூ. 1 கோடி பரிசளிக்கப்பட்டுள்ளது.

வீரர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறோம். எத்தனையோ ஏழை வீரர், வீராங்கனைகளின் கனவை விளையாட்டுத் துறை நனவாக்கி வருகிறது'' என முதல்வர் பேசினார்.

Summary

Double-digit growth in the sports sector too M.K. Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.