கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

கரூர் பலி! தவெக அடுத்தகட்ட நகர்வு என்ன? செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படுகிறதா?

கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோரை சந்தித்த பிறகு, விரிவான செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படும் - நிர்மல் குமார்

News image
Updated On :14 அக்டோபர் 2025, 6:56 pm IST

கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோரை சந்தித்த பிறகு, ஒரு விரிவான செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படும் என்று தவெக இணைச் செயலாளர் கூறியுள்ளார்.

கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவது குறித்து தவெக இணைச் செயலாளர் நிர்மல் குமார் பேசுகையில் ``கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக பொதுச் செயலாளர் வாயிலாக, இன்னும் ஓரிரு நாள்கள் அறிவிப்புகள் வெளிவரும். எந்த இடம்? எந்த தேதி என்பவற்றை நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர்.

இந்தத் துக்கத்தில் இருந்து நாங்கள் எந்த நிகழ்ச்சியும் செய்யவில்லை. கரூர் மக்களை சந்தித்த பிறகுதான், எங்களின் எந்தவொரு விஷயத்தையும் அடுத்தகட்டத்துக்கு யோசிக்க முடியும். ஏனெனில், அதுதான் எங்களின் முக்கியம்.

இடம் கிடைப்பது முதலான சிக்கல்கள்வரையில் மற்ற கட்சிகளைவிட எங்களுக்கு அதிகமிருப்பதால், நாங்கள் திட்டமிட வேண்டியுள்ளது’’ என்று தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில், ``வழக்கு தொடர்பாக கரூர் மக்களைச் சந்தித்த பிறகு விரிவான செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படும். ஏனெனில், நடந்த நிகழ்வுகள், என்னென்ன கேள்விகள் எங்கள் மனதில் இருந்தது என்பதையும் நீதிமன்றத்தில் கூறியுள்ளோம்.

யாரும் எங்கும் தலைமறைவாக இல்லை; யாரும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. நாங்கள் எங்கள் வாழ்நாள் துக்கத்தில் இருக்கிறோம்’’ என்றும் தெரிவித்தார்.

Summary

What is the next move for TVK? Is a press conference being held?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.