ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

விளையாட்டுப் பல்கலை. சட்டத் திருத்த மசோதா விவகாரம்: ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு

சட்டத் திருத்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அனுப்பியதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு

News image
ஆளுநர் ஆர்.என். ரவி- கோப்புப் படம்
Updated On :15 அக்டோபர் 2025, 12:12 pm

தினமணி செய்திச் சேவை

நமது நிருபர்

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் கோரி அனுப்பப்பட்ட விளையாட்டுப் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்ட மசோதா ஒப்புதல் விவகாரத்தில் தமிழக அரசு இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளது.

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா கடந்த ஏப். 29-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது . தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்கவும், பதவி நீக்கம் செய்யவும் தமிழக அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது இந்த மசோதா.

தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: துணைவேந்தரை நியமிக்கும் மற்றும் நீக்கும் அதிகாரங்களை வேந்தருக்கு அதாவது ஆளுநருக்குப் பதிலாக மாநில அரசுக்கு வழங்குவதன் மூலம், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகச் சட்டம், 2004-இன் சில விதிகளைத் திருத்துவதற்கான மசோதாவாகும் இது.

இந்த மசோதா ஏப். 29- இல் தமிழக சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, அதே நாளில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு, மே 6-ஆம் தேதி முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையுடன், அதே நாளில் ஆளுநரின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பப்பட்டது. இருப்பினும், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையைப் புறக்கணித்து, ஆளுநர் மசோதாவின் அரசமைப்பு செல்லுபடியை தாமாகவே சோதித்துப் பார்ப்பதில் ஈடுபட்டார். இதன்மூலம் ஆளுநர் மாளிகையை அரசமைப்பு நீதிமன்றமாக அவர் மாற்றினார்.

மேலும், ஜூலை 14-ஆம் தேதி மசோதாவின் சில விதிகள் யுஜிசி ஒழுங்குமுறை விதிகளை மீறுவதாகக் கூறி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மசோதாவை ஆளுநர் ஒருதலைப்பட்சமாக அனுப்பி வைத்துள்ளார். எனவே, மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும். மசோதாவை ஆளுநர் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு மனுவில் கோரியுள்ளது.

summary

TN Govt files petition in Supreme Court against Governor RN Ravi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.