ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சாதிப் பெயர்களை நீக்குவதில் இறுதி முடிவு கூடாது - நீதிமன்றம் உத்தரவு

ஊர்கள், தெருக்களில் சாதிப் பெயர்களை நீக்குவது குறித்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கக் கூடாது - மதுரை அமர்வு

News image

சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்

Updated On :17 அக்டோபர் 2025, 3:16 pm IST

ஊர்கள், தெருக்களில் சாதிப் பெயர்களை நீக்குவது குறித்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கக் கூடாது சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.

ஊர்கள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கி, மறு பெயரிடுவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க சமீபத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

அதன்படி, மறுபெயரிடுவது தொடர்பாக மக்களின் கருத்துகளை மதிப்பாய்வு செய்து, கள நிலைமை மற்றும் களத்தில் உள்ள உண்மைத் தன்மையின் அடிப்படையில் மறுபெயரிடுதல் பணியை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், இறுதிசெய்யப்பட்ட பெயர்களை மாற்றம் செய்வதற்கான பணிகளை நவம்பர் 11 ஆம் தேதிக்குள் முடித்து, மாவட்ட அரசிதழில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்தது.

இதனிடையே, சாதிப் பெயர் மாற்றம் குறித்த அரசின் உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

சாதிப் பெயர்களை நீக்கும் முடிவுக்கு பாராட்டு தெரிவித்த மதுரை அமர்வு, சாதிப் பெயர்களை மாற்றுவது குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டது.

இருப்பினும், சாதிப் பெயர்கள் நீக்குவது குறித்து கருத்துக் கேட்பு, ஆய்வுகள் மேற்கொள்ள அனுமதியளித்ததுடன், பெயர் மாற்றத்தால் ஏற்படும் குழப்பத்துக்கு என்ன முடிவு? என்று தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

Summary

High Court Madurai branch orders status quo on removal of caste names

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.