சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

14 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் பெய்த கனமழை!

14 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் பெய்த கனமழை தொடர்பாக...

News image
மழை (கோப்புப்படம்)
Updated On :20 அக்டோபர் 2025, 5:54 am

இணையதளச் செய்திப் பிரிவு

14 ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளி நாளில் சென்னையில் கனமழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், வானிலை நிலவரங்களை அவ்வபோது சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார்.

சென்னையில் தீபாவளி நாளில் மழை என்பது கடந்த 2011 ஆம் ஆண்டுதான் கடைசியாக பெய்தது, அதற்குப் பிறகு இன்றுதான்(அக். 20) சென்னையில் கனமழை பெய்துள்ளதாக பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என்ன ஒரு தீபாவளி நாள், கடந்த 2011 ஆம் ஆண்டுதான் தீபாவளி நாளில் சென்னையில் இப்படி ஒரு கனமழை பெய்தது.

தென்சென்னை பகுதிகளான கிழக்குக் கடற்கரைச் சாலை(ECR), பழைய மகாபலிபுரம் சாலை(OMR) உள்ளிட்ட இடங்களில் நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது.

தீபாவளி நாளான இன்று தொடர் மழை பெய்யும், அதேசமயத்தில் விழாவினைக் கொண்டாட இடைவேளையும் கிடைக்கும். மழையுடன் கூடிய திருநாளை அனுபவிங்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

summary

Tamil Nadu weatherman Pradeep John has said that Chennai has received heavy rain on Diwali after 14 years.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.