புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கனமழையால் புதுச்சேரியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (அக். 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (அக். 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் தொடர் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

குறிப்பாக விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக புதுச்சேரியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (அக். 22) விடுமுறை அறிவித்து அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | பருவமழை: ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

Summary

Holiday for schools and colleges in Puducherry tomorrow

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com