மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சென்னை மெட்ரோ கட்டுமானத் தொழிலாளர்களின் மனிதநேயச் செயலுக்காக பாராட்டு

ஐந்து மெட்ரோ இரயில் கட்டுமானத் தொழிலாளர்களின் மனிதநேயமிக்க மற்றும் பொறுப்புணர்வுள்ள செயலைப் பாராட்டி பரிசு வழங்கியது.

News image
Updated On :24 அக்டோபர் 2025, 4:35 pm

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், இன்று HCC–KEC International நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் ஐந்து மெட்ரோ இரயில் கட்டுமானத் தொழிலாளர்களின் மனிதநேயமிக்க மற்றும் பொறுப்புணர்வுள்ள செயலைப் பாராட்டி பரிசு வழங்கியது.

சமீபத்தில், பூந்தமல்லி பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள உணவகம் ஒன்றில் இருந்து வெளியே வந்த பெண்மணி ஒருவர், எதிர்பாராத விதமாகத் தனது தங்கக் காதணி ஒன்றை சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் தவறவிட்டார்.

இதனை நேரில் கண்ட மெட்ரோ கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் உடனடியாக முன்வந்து வாளிகள் மற்றும் குவளைகளைப் பயன்படுத்தித் தேங்கிக் கிடந்த நீரை வெளியேற்றி, காணாமல் போன காதணிகளை மீட்டெடுத்து, உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். அவர்களின் இந்த தன்னலமற்ற மனிதநேயச் செயல் பொதுமக்களிடமும் ஊடகங்களிடமும் பாராட்டைப் பெற்றதுடன், சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் தொழிலாளர்களின் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தியது.

இந்த மனிதநேயச் செயலை அங்கீகரிக்கும் விதமாக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், HCC–KEC International நிறுவனத்தில் பணிபுரியும் கட்டுமான தொழிலாளர்களான எஸ்.கே. பரிகுல், எஸ்.கே. கலாம், எஸ்.கே. சுமோன், எஸ்.கே. பரியுல் மற்றும் அமீர் ஆகிய ஐந்து பேருக்கும் தலா ரூ.2,000/- ரொக்கப் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கியது.

இந்த பரிசுகளை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை பொதுமேலாளர் எஸ்.அசோக் குமார், (வழித்தடம் மற்றும் உயர்மட்ட கட்டுமானம்) , தொழிலாளர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் HCC–KEC International நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

summary

Chennai Metro Rail Limited (CMRL) today honoured five Metro Rail construction workers employed under M/s HCC-KEC International Ltd. for their commendable act of civic responsibility and humanitarian initiative near Poonamallee Bus Terminus.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.