மொந்தா புயல் ஆந்திரத்தை நோக்கிச் செல்லும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
தற்போது, வங்கக் கடலில், நிலப்பரப்புக்கு வெகு தொலைவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதால் இது புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் சின்னத்துக்கு மொந்தா என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
வானிலை நிலவரங்களை அவ்வபோது சமூக ஊடகங்களை வெளியிடும் தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான், மொந்தா புயல் தொடர்பான தகவலை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், ” மொந்தா புயலால் மழைக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன.
வாய்ப்பு 1: புயல் சின்னம் வட தமிழகத்தின் நிலபரப்புக்கு வாராமல், கடலிலேயே ஆந்திரத்துக்கு செல்லும் பட்சத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் கனமழையைத் தவறவிடும், சாதாரண மழை மட்டுமே கிடைக்கும்.
வாய்ப்பு 2: வட தமிழக கடற்கரைக்கு அருகில் வந்து, ஆந்திரத்துக்கு வளைந்து செல்லும்போது - சென்னையில் மட்டும் கனமழை பெய்யும்.
சென்னை மாவட்டம் மழையைத் தவறிவிடப்போகிறதா? அல்லது இந்தப் புயல் சின்னத்தால் நாம் ஏதாவது பெறப் போகிறோமா? என்பது குறித்து ஞாயிற்றுக்கிழமைக்குள் நமக்கு தெளிவு கிடைக்கும்.
இந்தப் புயல் ஆந்திராவுக்கு நகர்ந்த பிறகு என்ன நடக்கும்
அடுத்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகுவதற்கு முன்பு வரை, தமிழ்நாட்டில் நிறைய மழை பெய்யும். நவம்பர் முதல் வாரம் பருவமழையின் தீவிரம் குறைவாக இருக்கும்.
வட தமிழகம் மற்றும் ஆந்திரக் கடற்கரையில் உள்ள மீனவர்கள் கடல் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், மேலும் அக். 25 முதல் 28 வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் ”என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,120 குறைந்தது!
Summary
Tamil Nadu weatherman Pradeep John has predicted that Cyclone Mondha will head towards Andhra Pradesh.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வாழ்க்கைப் பயணம்

வாழ்க்கையில் மறக்க முடியாத கதாபாத்திரம்... திருநங்கை அனுஸ்ரீ வேலன் நெகிழ்ச்சி!

மின்சார ஒழுங்குமுறை விதிகள்: பொதுமக்களிடம் கருத்து கேட்பு

பசுமை தமிழ்நாடு திட்டத்தில் மரக்கன்றுகளை முறையாக பராமரிக்க வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



