கோவையில் ரயிலைக் கவிழ்க்க தண்டவாளத்தில் மரக்கட்டை வைத்த, 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில், ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளது. இங்கு பல லட்சக் கணக்கான மக்கள் வெளியூர், வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து குடும்பத்துடனும் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
இதில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருவது ரயில்களைதான்.
இதைத் தொடர்ந்து கோவையில இருந்து நாள்தோறும் நூற்றுக் கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவையில் இருந்து இருகூர் வழியாக சிங்காநல்லூர் செல்லும் ரயில் பாதையில் சூர்யா நகர் என்ற பகுதியில் கடந்த 22 ஆம் தேதி தண்டவாளத்தில் மரக்கட்டைகள் இருப்பதாக ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிய வந்தது.
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே காவல் துறையினர், அங்கு ரயில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டு இருந்த மரக்கட்டையை அகற்றி விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், அங்கு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
அதில் கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ், கோகுலகிருஷ்ணன், வினோத் என்ற சசிகுமார், கார்த்திக், புல்லுக்காட்டு பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மற்றும் சேலத்தைச் சேர்ந்த வேதவன் என்ற 6 பேர் என்பது தெரிய வந்தது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் தண்டவாளத்தில் மரக்கட்டையை வைத்து ரயிலை சேதப்படுத்த முயன்றது தெரிய வந்தது. பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆகாஷ், தினேஷ், வேதவன் ஆகிய மூன்று பேர் ரயில் வண்டியை சேதப்படுத்தி பயணிகளின் உடைமைகளை திருடும் நோக்கத்துடன் கீழே கிடந்த மரக்கட்டைகளை எடுத்து ரயில் தண்டவாளத்தில் வைத்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் மூன்று பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கோவை மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்தார்.
சிறையில் உள்ள அவர்களிடம் உத்தரவு நகல் வழங்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிக்க: மகாராஷ்டிர பெண் மருத்துவா் தற்கொலை: உதவி ஆய்வாளா் கைது
Summary
The Goon Act was imposed on 3 people who placed a wooden block on the tracks to derail a train in Coimbatore.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

UN Kannan Interview | TVK அரசை கவிழ்க்க நினைத்தால்...? | TVK | CM Vijay | ADMK | Edapadi Palaniswami

கோவை சிறுமி பாலியல் கொலை: கார்த்திக், மோகன்ராஜ் மீது குண்டர் தடுப்புச் சட்டம்!

ரயிலிருந்து தவறி கீழே விழுந்த இளைஞா் உயிரிழப்பு

பயணிகள் ரயிலைக் குறிவைத்து தற்கொலைப் படை தாக்குதல்! 24 பேர் பலி! | Pakistan
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



